விளக்கு அணைந்ததும் இருள் ஒளிர்ந்தது.
மிளிர்ந்த இருளில் உலக உருவ பொருட்கள் அன்றி
தெரிந்ததெல்லாம் இவ்வுலகு சாரா
அருவப் பொருட்கள் .
"உடல் மூடிய மனதும்
நிலை இல்ல அற்புத நினைவுகளும் கூட"
---------------------------------------------------------------------------------------------
சந்தேகம் ...
நான் முரண்பாடு என்ற வார்த்தைக்குள் அடங்கி விட்டேன் என்று.
---------------------------------------------------------------------------------------------
என் காதுகளில் இது எப்போதும் கேட்க கூடும்.
" ஏன் நீ சாதாரணமாக இல்லை "
---------------------------------------------------------------------------------------------
இங்கு மனிதர்கள் அசாதாரணமாக மாறி விட்ட போது
மிக எளிய வெறுமை அசாதாரணமாக தான்
தெரியும் அல்லவா
---------------------------------------------------------------------------------------------
ஒன்று உலகம் என்னைப் புரிந்து கொள்ளவில்லை.
மற்றொன்று
என்னால் உலகை புரிந்து கொள்ள முடியவில்லை .
இதில் ஏதேனும் ஒன்றுக்குள் அடங்கி இருந்தால்
( சாதாரணமானவன் அல்ல பைத்திய காரன்)
ஏதோ ஒரு பெயரை பெற்றிருப்பேன்.
நானோ இதில் கலக்காது ஒதுங்கி நின்றதால்
பெயர் இல்லா ஒன்றனேன்.
---------------------------------------------------------------------------------------------
ஆண்டாண்டு காலமாக பழகிப்போன விதிமுறைகளும்.
நடைமுறைகளும் தான் இங்கு தேவை
நான் சாதாரணமானவன் என்று
நிரூபிக்க...
---------------------------------------------------------------------------------------------
இந்த உலகம் முழுதும்
உன்னத உண்மையை ஏற்க மறுக்கிறது
நாம் தற்செயல்
இங்கு எல்லாமே தற்செயல்
ஒரு புள்ளியில் எல்லாமே முடிந்துவிடலாம்
என்பதை

0 கருத்துகள்