இருள் ஓர் வகை பிரதிபலிப்பு


இருள் சூழ்கையில் ஒவ்வொரு மனினும் ஓர் உணர்விற்க்கு உள்ளாகிறான். 

பயம்,கவலை,காமம்,விரக்தி,தனிமை,ஆசை,வெறி,சலனம் இன்னும் பல.. இதில் ஓர் உண்மை உண்டு.

நம் பிரதிபலிப்புக்கள் தான் அது...

நம் ஆள்மனதில் உறங்கி கிடப்பவை இருளில் விழித்து கொள்கிறது. அதுவே இருளில் பிரதிபலிக்கிறது.

இருளில் வெளிச்சம் மட்டுமே அற்றுப் போகும். 

சூரிய ஒளி கண்ணின் பார்வையை மறைப்பது போல நாமும் வெளியில் நாம் யார் என்பதை மறைத்து கொள்கிறோம். 


இருளில் இருள் இருப்பதையே பிரதிபலிக்கிறது

இருளின் துணைகள்

இருளில் யாவும் வெளிப்படும்.. செயற்படும்.. புரிந்து கொள்ளமுடியாது.
புரிந்து கொள்ள இருளொடு இருளின் இரு துணைகள் வேண்டும்.

ஆழமும் அமைதியும் தான் அது !

இருளின் தனிமையின் அமைதியில் உன் மன ஆழம் சென்று பார்..

நீ எதனோடு வாழ்கிறாய் என்று உணரக்கூடும்.



இப்படிக்கு
நான்
இருள் மனிதன்